தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
Sunday, 21 October 2012
தமிழ்ச் சாதிகளின் வரலாறு
மனிதனின் தோற்றம் பற்றிய சர்ச்சைகளை விடுத்து மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, அறிவியல் ரீதியாக இயங்கியல் தத்துவத்தின்படி பகுத்தறியும்போது மட்டுமே சாதி பற்றிய இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.இயங்கியல் தத்துவத்தின்படி, ஆதியில் மனிதன் மழை ,வெள்ளம் போன்றவைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக்
கொள்ள மலைகளிலேயே வாழ்ந்தான். மலைகளில் காட்டுவாசியாக இருந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தான்.
கூட்டம் கூட்டமாக வாழ்ந்த அம்மக்கள் குறிஞ்சி நில குறவன்-குறத்தி ( இன்றைய குறவன்-குறத்தியோடு மட்டும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. பல பழங்குடிகளும் குறவன் குறத்திகளே.) என அழைக்கப்ட்டனர். குகைகளில் வைத்து உண்ணப்படும் பொருட்கள் ( இறைச்சி, பழங்கள் ) நீண்ட நாள் மழை மற்றும் இயற்கை சீற்றத்தின் போது கெட்டுப் போய் அவர்களை பலநாள் பசியில் ஆழ்த்தியது.நீண்ட நாள் மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அவன் குகையை விட்டு
வெளியல் வந்து வேட்டையிட முடியாமல் போனது.
மனிதன் ஆற்றங்கரைச் சமவெளிகளுக்கு இடம்பெயர்ந்த நிகழ்வுதான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சின் அடுத்த கட்டமாகிப் போனது. பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் கண்டுபிடித்தது. அம்மக்களே பள்ளர்/மள்ளர் என அழைக்கப்பட்டனர். இந்நிலப்பரப்பே மருதம் என அழைக்கப்பட்டது. மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது மனிதனின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன. ஒப்பில்ல உணவு உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மை மருதநிலப் பள்ளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்ப்பட்டது.
முதன் முதலில் மனிதன் மீன் பிடிக்க கற்றுக்கொண்டதே ஆறு மற்றும் குளங்களில்தான். அதன்பின் மனிதன் கடலில் மீன்பிடிக்கவும் கற்றுக்கொண்டான். அவ்வாறு மருதநில ஆறுகளில் மீன்பிடித்த மக்களே கரையாளர் என அழைக்கப்பட்டனர். அவர்களே நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கரையாளப் பள்ளர் எனவும் அழைக்கப்பட்டனர். கடலில் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்ட மருதநில மக்களே நெய்தல்நில மக்களாகவும் மீனவர், பரதவர், முக்குவர் எனவும் அழைக்கப்பட்டனர்.
-
செம்மான்(தோல் தொழிலாளி)
-
குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
-
கொத்தன்(வீடு கட்டுவோர்)
-
கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
-
கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
-
தட்டான்(பொன் வேலை செய்வோர்)
-
தச்சன்(மரவேலை செய்வோர்)
-
கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
-
செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
-
கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
-
பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
-
கிணையன்(கிணைப் பறையன்)
-
பாணன்(பாடுநர்)
-
கூத்தன்(ஆடுநர்)
-
வள்ளுவன்(அறிவர்)
-
மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
-
வண்ணான்(சலவைத் தொழிலாளி)
-
மஞ்சிகன்(சவரத் தொழிலாளி)
இவர்களைத் தவிர பிள்ளை, முதலி போன்ற பட்டங்களைக் கொண்டும் பல சிறு சிறு சாதிகளும் உள்ளன. அவையாவும் இடைக்காலத்தில் உருவான சாதிகள் ஆகும். இன்றைய சாதி என்பது தமிழர்களின் தொழில் அடிப்படையில் இருந்த அடையாளம் ஆகும். அவ்வடையாளத்தை எவ்வித சிக்கலும் இல்லாமல்தான் தமிழர்கள் வைத்திருந்தனர்.
வந்தேறி தெலுங்கு வடுகர்களால்(நாய்க்கர் ) நிகழ்த்தப்பட்ட வேந்தர்களின் வீழ்ச்சி தமிழரின் வாழ்வியல் அமைப்பையே தலைகீழாய்ப் புரட்டிப்போட்டது. தொழிற்பிரிவுகள் சாதிகளாக இருக்கப்பட்டன.
செம்மையடைந்தது. மருதநிலத்தின் பெருஞ்செல்வமானது பகைவர்களையும் கள்வர்களையும் மருத நிலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.
காக்கும்பொருட்டு அரசு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இவ்வரசு எனும் அமைப்பானது பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் பேரரசு எனும் நிலையை அடைந்தது. மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தவுடன் அக்குடும்பத் தலைவன் குடும்பன் எனப்பட்டான். பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த பகுதி ஊர் எனப்பட்டது. எனவேதான் மருத நிலக் குடியிருப்புகள் மட்டுமே ஊர் என அழைக்கப்பட்டன. அவ்வூரின் தலைவன் “ஊர்க் குடும்பன்” எனப்பட்டான்.இவ்வாறு பல ஊர்களையும் ஒருங்கிணைத்து நாடுகள் எனும் சிறுசிறு நிலப்பகுதியும் அந்நாடுகளின் தலைவர்கள் “நாட்டுக் குடும்பர்கள்” எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வமைப்பே பாண்டியர்கள் வீழ்ச்சியடைந்த 15 – ஆம் நூற்றாண்டுவரை தமிழரின்(சேர சோழர் உட்பட ) உள்ளாட்சி அமைப்பாக இருந்தது. இப்படியான பல நாடுகளையும் ஒருங்கிணைத்து உருவானதே அரசு எனும் பெரும் நிறுவனம் ஆகும். அவ்வாறான பெரும் பாண்டிய அரசின் மன்னர்களில் பெருங்குடும்பனே முதுகுடுமி பெருவழுதியாவான். அரசு எனும் அமைப்பானது தனது எல்லையை நால்வகை நிலங்களுக்கும் விரிவுபடுத்தியே அமைக்கப்பட்டது.
அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளர் எனும் பெயர்கொண்டு பல ஊர்கள் உள்ளன. வெளி நாடுகளிலேயே தமிழினத்திற்கான சான்றுகள்
நூற்றுக்கணக்கில் காணக் கிடைக்கும்போது
இந்தியாவிலோ நாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன.இந்தியாவில் தமிழர்களின் வரலாறு மீட்டெடுக்கப்படுமானால்
இந்தியாவின் ஆதிக்க சக்திகள் தமிழரே. ஆனால் இந்தியாவில் உள்ள
தமிழர்கள் அனைவரும் தமிழருடைய
அடையாளமாக இன்றும் வைத்திருப்பது பள்ளர், மள்ளர், குடும்பர் எனும் பெயர்களையே. இவை அனைத்தையும் தமிழினத்திற்கான சான்றாக தமிழினத்திற்கான ஆளுமையாகப் பார்க்காமல் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பதனாலேயே தமிழனின் பெருமையும் புகழும் மதுரைவரைக்கூட தெரியாமல் புதைந்து கிடக்கிறது.
முல்லை நில மக்களோடு கொங்குப் பகுதி பள்ளர்கள் வைத்திருந்த கலப்பு உறவே பின்னாளில் கவுண்டர் எனும் சாதி உருவாகக் காரணம் ஆனது. உண்மையில் கவுண்டர் என்பது சாதியல்ல; ஒரு பட்டம். கவுண்டர் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய மக்கள் எல்லோரிடமும் தங்களுக்கிடையே கொள்வினை-கொடுப்பினை கிடையாது.ஒக்கலிகா போன்ற கவுண்டர் பிரிவுகள் தெலுங்கு பேசும் மக்கள் ஆவர்.
இன்றைய கவுண்டர்களில் மல்லக் கவுண்டர் என்று ஒரு பிரிவும் உண்டு. கவுண்டர் பிரிவுகள் சில பழனி முருகனை
கும்பிடுவதோடு அவரோடுள்ள இடும்பன் எனப்படும் “குடும்பன்” சாமியை
கொண்டாடுவது கவுண்டர்களின் மருத நிலத்தொடர்பேயாகும். முல்லை நில மக்களோடு உறவு கொண்ட பள்ளர்களால் வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் முல்லைநில மக்களைக் கட்டுப்படுத்த முடியாதுபோய் போரில் முடிந்தது; அதுவே அண்ணன்மார் வரலாறும் ஆனது.சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பள்ளர்களில் ஒரு பகுதியினர் முல்லை நில மக்களின் கலப்பால் பள்ளி எனும் பெயரில் வன்னியர் எனும் தனிச்சாதியினர் ஆனர். வன்னியர் என்பது பட்டமே; சாதியல்ல. இலங்கையில் வன்னியர் எனும் பெயர் கொண்டோர் அனைவரும் பள்ளர்களே. தமிழகத்திலும்
அணைத்து பாண்டியராசா கோவில்களிலும் வன்னிராசாவும்
வன்னிமாச்சியும் பள்ளர்களாலேயே வணங்கப்படுவது, வன்னியர் முல்லைநில மக்களின் கலப்பால் பிரிந்த பள்ளர்களின் ஒரு பகுதியினர் என்பதாலேயே ஆகும்.
வன்னியர்களில் ஒரு பிரிவு மக்கள் தெலுங்கு பேசுவதும் உண்டு. இவர்களுக்கும் ஏனைய வன்னியர்களுக்கும் கொள்வினை-கொடுப்பினை கிடையாது.
இம்மண்ணையும் மக்களையும் காத்து நின்ற வேந்தர்களின் வீழ்ச்சி,
ஒன்றாய் இருந்த தமிழினத்தை சாதியாய்ச் சூறையாடி இன்று வரையிலும்
– செல்லப்பாண்டியன்
( நன்றி : கடலியியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் திரு.ஒரிஸ்ஸா பாலு அவர்கள். )
அருமையான உண்மை பதிவு….